தனிமைப்படுத்தப் பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியான எம்.பிக்களுடன் பாராளுமன்றத்தில் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தமை கண்டறிப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில் தனக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு